நல்ல தமிழ் : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் 61-80

பிழையின்றித் தமிழ் பேசுவோம்எழுதுவோம்


தமிழில் பேசும்போதும்,எழுதும்போதும் பல தவறுகளைச் செய்கிறோம்.பேச்சுத் தமிழில் செய்யும் தவறுகளை  யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் எழுதும்போது நாம் செய்யும் தவறுகள், பளிச்சென்று தெரிகின்றன.அவற்றைக் களைந்து நல்ல தமிழில் எல்லோரும் எழுதவேண்டும் என்பதே இந்த வலைப்பூவின் நோக்கம்.     
61
பிழை
சரி
தமிழ் தாய் வாழ்த்து பாடினான்.
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினான்.



62
பிழை
சரி
பலக் கலைகள் பயின்றான்.
பல கலைகள் பயின்றான்.



63
பிழை
சரி
ஆயிரத்தி தொளாயிரத்தி எண்பத்தி ஒன்பது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து ஒன்பது.



64
பிழை
சரி
சாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்தனர்.
சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தனர்.



65
பிழை
சரி
பாலை நன்றாய் குடிக்குது கன்று குட்டி.
பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.



66
பிழை
சரி
.இராமனோடுச் சென்றான் இலக்குவன்.
இராமனோடு சென்றான் இலக்குவன்.



67
பிழை
சரி
படத்திற்கு மர சட்டம் போட்டான்.
படத்திற்கு மரச்சட்டம் போட்டான்.



68
பிழை
சரி
மருந்து கடையில் மருந்து வாங்கினேன்.
மருந்துக் கடையில் மருந்து வாங்கினேன்.



69
பிழை
சரி
கடற்கரை சாலை மிகவும் அழகானது.
கடற்கரைச்சாலை மிகவும் அழகானது.



70
பிழை
சரி
பாம்பு புற்றில் கை விட்டான்.
பாம்புப் புற்றில் கை விட்டான்.



71
பிழை
சரி
தாமரை கண்ணான் உலகு.
தாமரைக் கண்ணான் உலகு.



72
பிழை
சரி
செல்ல கிளியே! தமிழ்ப்பேசு.
செல்லக்கிளியே! தமிழ் பேசு.



73
பிழை
சரி
நெய்பவனுக்கு எதற்கு குரங்கு குட்டி?
நெய்பவனுக்கு எதற்குக் குரங்குக் குட்டி?



74
பிழை
சரி
வாழ்கப் பாரதியார் புகழ்!
வாழ்க பாரதியார் புகழ்!



75
பிழை
சரி
கோழி தவிடு விற்றான்.
கோழித்தவிடு விற்றான்.



76
பிழை
சரி
தண்ணீர் பாத்திரம் நிரம்பியது.
தண்ணீர்ப்பாத்திரம் நிரம்பியது.



77
பிழை
சரி
.எங்கு போய் தேடுவேன்?
எங்கு போய்த் தேடுவேன்?



78
பிழை
சரி
குருவி கூட்டை கலைத்தான்.
குருவிக்கூட்டைக் கலைத்தான்.



79
பிழை
சரி
தீ பந்தம் பிடித்தான்.
.தீப்பந்தம் பிடித்தான்.



80
பிழை
சரி
பொய் சான்று சொன்னான்.
பொய்ச்சான்று சொன்னான்.